இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தென் ஆப்பிரிக்கா டி20, ஒருநாள் தொடரை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காட்டி இருக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற புள்ளிவிவரம் அந்த அணியின் பலத்தை காட்டுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா, அதன் பிறகு தொடர்ந்து வெளிநாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
உலகின் “நம்பர் ஒன்” டெஸ்ட் அணியான தென் ஆப்பிரிக்கா, இந்திய அணியை விட மிக வலுவானதாகவே இருக்கிறது என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போட தீவிர முயற்சியில் களமிறங்கி உள்ளது