இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

461

 

இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வரும் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 3 நாள் பயணமாக இலங்கை வரும் பாப்பரசர் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.popejhfvhfhhf அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்திக்கவுள்ளளார். இந்நிலையில் அவரின் வருகை தொடர்பான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இந்நிலையில் முன்னர் இலங்கைக்கு வருகை தந்த பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலின் பயணத்துக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. இதேபோன்று தங்போது இலங்கை வருகை தரவுள்ள பாப்பரசர் பிரான்சிஸின் பயணத்துக்கும் குண்டு துளைக்காத கார் ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் இந்தக் காரை ஏற்க பாப்பரசர் மறுத்து விட்டார் என்றும் அவர் மக்களுக்கு அருகிலேயே இருக்க விரும்புகிறார் எனவும் கூறினார் என்றும் கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்

SHARE