முடியுமா, முடியாதா? அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு

437

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும் 38 விரிவுரை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. ஸ்ரீபவன், சந்திரா ஏக்கநாயக்க, ஈவா வனசுந்தர, ரோஹினி மாரசிங்க, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மகிந்த அனுப்பிய விளக்க கோரிக்கை ஆராயப்பட்டது.

இந்த நீதியரசர் குழுவில் வெளிநாடு சென்றிருந்த சலீம் மர்சூக் மாத்திரமே இடம்பெறவில்லை.

பிரதமர் டி.எம். ஜயரத்ன, கோமின் தயாசிறி, க்ஷனிகா ஹிரிபுரேகம, ஜே.சி. வெலியமுன, பேராசிரியர் சுதந்த லியனகே, பேராசிரியர் சம்பத் பண்டார, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சுனில் வட்டகல, ஊடகவியலாளர் கே.டப்ளியூ. ஜனரஞ்சன, கலாநிதி என்.எல்.கே. கருணாரத்ன, ஆகியோர் உள்ளிட்ட 38 பேர் எழுத்து மூலமான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

 

SHARE