அரசின் அழுக்கை கழுவும் வீரவன்ஸ சல்லி காசுக்கும் மதிப்பற்றவர்:

384

அரசாங்கத்தின் அரசியல் அழுக்கை கழுவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, ராஜபக்ஷவினரின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்க அணித்திரண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், சல்லி காசுக்கும் மதிப்பில்லாதவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

வீரவன்ஸ தனக்கு தானே 600 மில்லியன் ரூபா என்று விலையை நிர்ணயம் செய்து கொண்டாலும் அரசாங்கத்தின் அரசியல் அழுக்கை கழுவும் அவருக்கு, மக்கள் மத்தியில் மதிப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் அரசாங்கத்தில் இருந்து வெளியேற போவதாக அந்த முக்கிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தான் உள்ளிட்ட தமது அணியினர் மனசாட்சிக்கு இணங்கி இந்த தீர்மானத்தை எடுத்த போதிலும் ஜனாதிபதியின் மேசையில், இருக்கும் ஊழல், மோசடிகள் அடங்கிய பல கோப்புகளை கொண்டுள்ள வீரவன்ஸ போன்றவர்களுக்கு அரசாங்கத்தின் கழிவறையை கழுவி சுத்தம் செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் குறித்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

SHARE