மைத்திரியின் பொலநறுவை கூட்டத்தில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா உளவு விமானம்! மைத்திரியை கொல்ல முயற்சியா? உண்மை என்ன?

434

சென்ற வாரம் பொலநறுவையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால தலைமையில் நடந்த முதல் பிரசாரக்கூட்டத்திந போது ஆளில்லா Dron வகை விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததை பலரும் அவதானித்தனர்.

அதேவேளை இது தொடர்பில் படத்துடன் பேஸ்புக் பக்கத்தில் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதில் முக்கியமான இரண்டு கருத்துக்களில் ஒன்று.

“மைத்திரியின் முதல் பிரசாரக்கூட்டத்தில் வெளிநாட்டு NGO அமைப்பினர் அதிசக்தி வாய்ந்த ஹெலிகாப்டர் ஒன்றை பாவித்துள்ளது தெரியவந்துள்ளது. இது போன்ற வெளிநாட்டு சதிகளை இல்லாதொழிப்போம் என்ற தொனியிலும், மற்றது,

ஆளில்லா விமானம் மூலம் மைத்திரிபாலவை கொல்ல முயட்சி நடைபெற்றது என்ற தொனியிலும் கருத்துகள் வெளியாகி இருந்தன. அதற்கு பலர் ஆமா சாமி போடும் கருத்துகளையும் இட்டு இருந்தனர்.

உண்மையில் இந்த சிறிய ரக ஆளில்லா விமானம் பற்றி சரியான தெளிவு இல்லாதபடியால் தான் பொதுமக்கள் இது போன்ற கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.

இப்பொழுது இலங்கை உட்பட உலக நாடுகளில் நிகழ்ச்சிகளை வீடியோ செய்வதற்கும், புகைபடம் எடுப்பதற்கும் இது போன்ற சிறிய ரக ஆளில்லா விமானங்களை பலர் பாவித்து வருகின்றனர்.

திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள் உட்பட அண்மையில் திருமண மண்டபம் ஒன்றில் (தமிழ்நாட்டில்) கூட இது போன்ற ட்ரோன் விமானம் ஒன்று விருந்தினர்களை வீடியோ/ புகைப்படம் எடுப்பதை முகநூல் வாயிலாக காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் உள்ள பிரபல கமெரா விற்பனை செய்யும் கடை ஒன்றும் இவ்வாறன ட்ரோன் விமானங்களை விற்பனைக்கு வைத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

பொலநறுவையில் அன்று நடைபெற்ற கூட்டத்தை இலகு முறையில் வீடியோ செய்யவே ஏற்பாட்டாளர்கள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாக தெரிய வருகிறது.

நன்றி,

-நாட்டுநடப்பு-

SHARE