இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்ட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

393

 

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்ட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்திய கடலோரக் காவல் படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்ட்ட இவர்கள் அனைவரும் நேற்றிரவே விடுதலை செய்யப்பட்டனர் என ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி கடற்பரப்பில் இலங்கைக் கொடியுடன் நின்ற 4 படகுகளை இந்தியக் கடலோரக் காவல் படை அவதானித்து அதிலிருந்த 19 மீனவர்களை கைது செய்தது. இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் புதுடில்லியில் இருந்து கிடைத்த உயர் மட்ட உத்தரவுகளுக்கு அமைய அவர்கள் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

SHARE