வேகப்பந்து வீச்சாளர் இர்பான் விலகல் பாகிஸ்தானுக்கு தொடரும் சோதனை…

719
துடுப்பாட்ட செய்தி
உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வருகிற 20-ம் திகதி அடிலெய்டில் நடைபெறவுள்ளது.இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் காயம் காரணமாக பங்கேற்றவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இர்பானுக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்த காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது இர்பானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் எஞ்சிய போட்டியில் இருந்த விலகினார் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தான் அணி அதன் முக்கிய பந்து வீச்சாளர்களான அஜ்மல், உமர் குல், முகமது ஹபீஸ் போன்றவர்களை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE