சிவப்பு அட்டை காட்டிய மத்தியஸ்தரை தாக்கி கொலை செய்த வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

378
ஏனைய விளையாட்டு செய்தி
அமெரிக்காவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் சிவப்பு அட்டை காட்டிய மத்தியஸ்தரை தாக்கி கொலை செய்த வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இதன்போது நீதிமன்றத்தில் வைத்து அந்நபருக்கு குறித்த மத்தியஸ்தரின் மனைவி சிவப்பு அட்டை காட்டியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியொன்றின் போது வீரர் ஒருவருக்கு சிவப்பு அட்டை காட்டியதால் அந்த மத்தியஸ்தரை மேற்படி வீரர் தாக்கினார். வீரரின் தாக்குதலால் குறித்த மத்தியஸ்தர் உயிரிழந்தார்.

44 வயதான ஜோன் பெய்னிஸ்விக்ஸ் எனும் கால்பந்தாட்ட மத்தியஸ்தரே இவ்வாறு உயிரிழந்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் அப்துல் அமீர் சாத் எனும் வீரருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்­போது நீதி­மன்­றத்தில் இருந்த ஜோன் பெய்­னிஸ்­விக்ஸின் மனை­வி­யான கிறிஸ் பெய்­னிஸ்விக்ஸ், தீர்ப்பு வழங்­கப்­பட்ட பின்னர் குற்­ற­வா­ளி­யான வீரரை நோக்கி சிவப்பு அட்­டை­யொன்றை உயர்த்­திக்­காட்­டினார்.

இந்த பிளாஸ்டிக் அட்­டை­யா­னது மத்­தி­யஸ்தர் ஜோன் பெய்­னிஸ்விக்ஸ் போட்­டி­க­ளின்­ போது பயன்­ப­டுத்­திய ஓர் அட்­டை­யாகும்.

அப்துல் அமீர் சிவப்பு அட்டை காட்­டப்­ப­டு­வ­தற்கு தகு­தி­யா­னவர். அதனால் அதை நான் அவ­ருக்கு காட்­டினேன்” என கிறிஸ் பெய்­னிவிக்ஸ் கண்­ணீ­ருடன் கூறினார்.

இதே­வேளை தனது நட­வ­டிக்­கைக்­காக தான் வருந்­து­வ­தா­கவும் தன்னால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தன்னை எப்போதாவது மன்னிப்பார்கள் எனக் கருதுவதாகவும் அப்துல் அமீர் சாத் தெரிவித்துள்ளார்.

SHARE