ருபேல் சீண்டிப் பார்த்த போதும் சினம் கொள்ளாமல் சென்ற கோஹ்லி….

351
இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லியை, ருபேல் ஹொசைன் சீண்டி பார்த்தும் அவர் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.பாலியல் சர்ச்சையில் சிக்கி ஜாமினில் வெளிவந்துள்ள ருபேல் ஹொசைனுடன் கடந்த சில வருடங்களாகவே கோஹ்லிக்கு மோதல் உண்டு.

கடந்த 2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வென்ற போது ருபேலுக்கும் கோஹ்லிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதேபோல் கடந்த 2011ம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் கோஹ்லி சதம் அடித்த போதும் ருபேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த வங்கதேசத்துக்கெதிரான காலிறுதி ஆட்டத்திலும் கோஹ்லி ருபேல் பந்தில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வெறுப்பேற்றும்விதமாக ருபேல் நடந்து கொண்ட போதும் கோஹ்லி மிக அமைதியாக சென்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளரிடம் கோபமாக பேசியதால் ஏற்பட்ட சர்ச்சையால் இந்த அமைதி என்று கூறப்படுகிறது.

SHARE