ஐபிஎல் 8: ரோஹித் சர்மாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

342
ஐபிஎல் சீசன்-8 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.சுற்றுத்தொடரின் 19வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் பெங்களூர் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை கண்ட மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த போட்டியில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. இதனால் அந்த அணியின் தலைவர் ரோஹித் சர்மாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சீசனில் விதிக்கப்படும் முதல் அபராதம் இதுவாகும்.

SHARE