ரூ.90 கோடியில் உடற்பயிற்சி மையத்தை நிறுவிய கோலி- டோனியை தொடர்ந்து…

373

கிரிக்கெட் வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இந்த பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்தும் பல கோடிகளாக்கி விடுகிறார்கள்.

இந்திய அணி கேப்டன் டோனி பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து இருக்கிறார். அதிக பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார்.

டோனியை தொடர்ந்து வீராட் கோலியும் வியாபாரத்தில் குதிக்கிறார். நாடு முழுவதும் நவீன தரத்தில் உடற்பயிற்சி மையங்களை அமைக்க இருக்கிறார். இதற்காக அவர் ரூ.90 கோடி முதலீடு செய்கிறார். ஹிசல் பிட்னஸ் சென்டர் என்ற பெயரில் இந்த உடற்பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.

யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா போன்ற வீரர்களும் பல்வேறு வியாபாரங்களில் முதலீடு செய்து உள்ளனர்.

SHARE