பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

396

 

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் செய்த சதி அம்பலம்!

cv_ma

 

வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தை திரிவுபடுத்தி இந்திய ஊடகங்கள் செய்திகளை தவறாக வெளியிட்டு வருகிறது.
நேர்மையான பேச்சும், எதையும் நேரடியாக துணிந்து சொல்லக்கூடியவருமான முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செல்வாக்கு இலங்கையில் மட்டுமன்றி உலகத்தமிழர்கள் மத்தியிலும் உயர்ந்து நிற்பதை தடுப்பதற்காகவே இந்த பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இச் செய்தி குறித்து ஆராய்ந்த போது தெரியவருவதாவது –
பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியையிட்டு தாம் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் செயலக வட்டாரங்கள், குறிப்பிட்ட செய்தி திரிவுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருந்தபோதிலும், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மகள் அத்தண்டனையை ரத்துச் செய்யக்கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சரின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார். அந்தப் பெண்ணின் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர், “சம்பந்தப் பட்டவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய கடிதத்தை உங்களுடைய கவனத்துக்கு அனுப்பிவைக்கிறேன்” என ஒரு குறிப்பை இணைத்துள்ளார்.
இதனைவிட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் கோரவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதான் உண்மைநிலை.
பாதிக்கப்பட்ட மக்களின் கடிதத்துடன் விக்னேஸ்வரன் மோடிக்கு அனுப்பிய கடிதம் – (குறிப்பிட்ட இரு கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.)

Seran Sathyan's photo.
Seran Sathyan's photo.
Like · Comment · 
SHARE