ஐபிஎல் 8: ரசிகர்கள் அதிகம் விரும்பும் அப்டிரி, சங்கக்காரா

360
துடுப்பாட்ட செய்தி
ஐபிஎல் தொடரில் எந்த வீரர்கள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருக்கிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இதில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் சாகித் அப்ரிடி 27.20 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார்.

இந்தியாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்டத் தடையால், சாகித் அப்ரிடி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

இவருக்கு அடுத்த இடத்தில் குமார சங்கக்காராவுக்கு 16.62 சதவீத வாக்குகளும், தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லாவுக்கு 11.03 வாக்குகளும் கிடைத்துள்ளன.

மேலும் முதல் பத்து இடங்களில் சாகிப் அல் ஹசன், பிரெண்டன் டெயிலர், ராஸ் டெயிலர் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

தனது அதிரடியால் ரசிகர்களை கவர்ந்த அப்ரிடி, கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட போது, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE