ஜேர்மனி தலைநகர் பெர்லின் பகுதியில் வசிப்பவர் அன்னிக்ரெட் ரவுனிக்(Annegret Raunigk 65). ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி ஆசிரியரான இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் மற்றும் 7 பேரக்குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் அவர் மீண்டும் கர்ப்பமானார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக தெரிவித்தனர்.
இது குறித்து அன்னிக்ரெட் கூறுகையில், எனது கடைசி மகள் தம்பி அல்லது தங்கை வேண்டும் என்று விரும்பினாள். இதன் காரணமாகவே நான் குழந்தை பெற்றுகொள்ள சம்மதித்தேன்.
மேலும் என் வயிற்றில் 4 குழந்தைகள் வளர்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது, என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று அவருக்கு 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்துல பிறந்தாலும் குழந்தைகள் ஆரோக்கியமாகவே இருக்குதுனு மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க.
இதன் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற உலகின் வயதான தாய் என்ற பெயரை அன்னிக்ரெட் பெறவுள்ளார். மேலும் 65 வயது பாட்டி ஒரே பிரசவத்துல 4 குழந்தைகள் பெற்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– See more at: http://www.manithan.com/news/20150523115205#sthash.jlxEYU6L.dpuf