டிராவிட்டை குட்டி பசங்களிடம் மாட்டி விட்ட சச்சின், கங்குலி

333
 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால் இந்திய அணியின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்படும் டிராவிட் இடம் பெறவில்லை.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடும் என்பதால் தான் அவர் இந்த குழுவில் இணைய மறுத்து விட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் டிராவிட்டின் பங்கு பற்றி பிறகு அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறியிருந்தார்.

இதனிடையே சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் டிராவிட்டை 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக தெரிவு செய்யுமாறு கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனால் அவர் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சியாளராக தெரிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

SHARE