வெளிநாடுகளில் மொடல் அழகிகளுடன் கும்மாளம்: அம்பலமான லலித் மோடியின் சொகுசு வாழ்க்கை

328

 

ஐபிஎல் நிதிமுறைகேடு வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் லலித் மோடியின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரின் தலைவராக 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் லலித்மோடி. இவர் தனது பதவி காலத்தில் ஐபிஎல் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

மேலும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகவும் மத்திய அமலாக்கப் பிரிவினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் இவருக்கு ரூ.1700 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சென்ற லலித் மோடி அதன் பிறகு இந்தியாவிற்கு திரும்பவே இல்லை.

இந்நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்திய வம்சாவளி எம்.பி.யான கீத் வாஸ் மூலம் லலித்மோடிக்கு லண்டனில் பயண ஆவணங்களை பெறுவதற்கு உதவினார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சுஷ்மா சுவராஜ் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், லலித் மோடி வெளிநாடுகளில் பிரபல மொடல் அழகி நவோமி கேம்பல் மற்றும் ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலங்களுடன் விருந்துகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

SHARE