உடைமாற்றும் அறையில் ஒலித்த டோனியின் குரல்: கோஹ்லி கண்ணீர் பேட்டி

360
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனி இல்லாதது அவரை இழந்துவிட்ட ஒருவித உணர்வை தந்ததாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோஹ்லி அணித்தலைவரானார்.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் உடைமாற்றும் அறையில் டோனி இல்லாமலே அவரது குரல் ஒலித்தது போன்று இருந்தது என்று கோஹ்லி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், நாங்கள் டோனியுடன் தான் பெரும்பாலான நேரத்தை செலவிட்டோம். நாங்கள் பல விடயங்களை பற்றி விவாதித்தோம்.

இந்நிலையில் அவர் இல்லாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் டோனி குரல் எங்கள் மத்தியில் எப்போதும் ஒலித்தபடியே இருக்கிறது.

அவருடன் இருந்த நாட்கள் எங்களால் மறக்க முடியாது. இதே போன்ற ஒரு சூழல் சச்சின் ஓய்வு பெற்ற போதும் எங்களுக்கு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

SHARE