இந்தியா – பங்களாதேஷ் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்

339
இந்­தியா – பங்­க­ளாதேஷ் அணிகள் இடை­ யே­யான ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் டாக்­காவில் இன்று நடைபெறவுள்ளது.டோனி தலை­மை­யி­லான இந்­திய அணி வெற்­றி­யுடன் கணக்கை தொடங்கும் ஆர்­வத்தில் உள்­ளது. இரு அணி­களும் கடை­சி­யாக உலகக் கிண்ணக் காலி­று­தியில் மோதின.

இதில் இந்­தியா 109 ஓட்­டங்­களால் வெற்றி பெற்­றது. ஆட்­டத்தில் நடு­வர்கள் இந்­தி­யா­வுக்கு சாத­க­மாக நடந்து கொண்­ட­தாக பங்­க­ளாதேஷ் குற்றம் சுமத்­தி­யது. அந்த சர்ச்­சைக்கு பிறகு இரு அணி­களும் தற்­போது சந்திக்கின்றன.

இந்திய அணி சார்பில் தவான், ரஹானே ஆகியோர் டெஸ்ட் போட்டியில் சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்கள். அணித் தலைவர் டோனி, கோஹ்லி, ரெய்னா, ரவிந்­திர ஜடேஜா, அம்­பத்தி ராயுடு, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்­களும் அணியில் உள்­ளனர்.

மொர்­தாசா தலை­மை­யி­லான பங்­க­ளாதேஷ் அணி சொந்த மண்ணில் இந்­தி­யாவை வீழ்த்தும் நோக்கில் உள்­ளது.

துணை தலைவர் சகீப்–­அல்–­ஹசன், முஸ்­பிகுர் ரகீம், மொமினுல் ஹக், தமிம் இக்பால், நாசிர் ஹுசேன், ரூபெல் ஹுசேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர்.

இரு அணிகள் இடை­யே­யான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மழை காரணமாக சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE