உலக கோப்பை தோல்விக்காக இந்தியாவை பழிக்குப்பழி வாங்கிய வங்கதேசம்

369
இந்தியா-வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் பகல்- இரவு ஆட்டமான நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த வங்கள தேச அணியினர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.

வங்கள தேசம் அணி 15.4 ஓவரில் 119 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தமீம் இக்பால் 57 ரன்னுடனும், தாஸ் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மழையினால் பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் மாறிய நிலையில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 307 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியாவின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் களமிறங்கினர். நிதானமாக ஆடிய தவான் 16-வது ஓவரில் 30 ரன்களுடன் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கோலி 4 பந்துகளிலேயே 1 ரன்னுடன் வெளியேற அடுத்து வந்த ரகானே 25 பந்துகளில் 9 ரன்னுடனும் வெளியேற அணியின் சரிவு தொடங்கியது.

பின்னர் களிமிறங்கிய தோனி, ரெய்னா ஜோடி மீது இருந்த பெரிய எதிர்பார்ப்பைக் பொயாக்கும்விதமாக தோனி 5 ரன்களுடன் வெளியேற ரெய்னா நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். ஆனால் ரெய்னாவும் கடைசி நம்பிக்கையாக இருந்த ஜடேஜாவும் கூட அவுட்டாக இனி எதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் என்ற நிலை. அடுத்து களமிறங்கியவர்களில் புவனேஷ் குமார் மட்டும் நிலைத்து நின்று ஆட அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க யாரும் இல்லாத நிலையில் 46 ஓவர்கள் முடிவில் 228 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

உலகக்கோப்பை காலிறுதியில் பெற்ற தோல்விக்காக இந்தியாவை பழி வாங்க நினைத்திருந்த வங்கதேசம் அதை சிறப்பாக செய்து முடித்தது

SHARE