நைஜீரியாவில் 38 பேர் பலி: போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டூழியம்

293
நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சரிசமமாக வாழ்கின்றனர். இந்நிலையில் அங்கு முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போகோஹாரம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி வைத்துள்ள அவர்கள் அரசுக்கு நிபந்தனையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் மனித வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இதையடுத்து நைஜீரியாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள முஹம்மது புஹாரி போகோஹாரம் தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த புதனன்று வடகிழக்கு நைஜீரியாவின் டிஃபா மாகாணத்தில் உள்ள லமானா மற்றும் கவுமோ கிராமங்களில் போகோ ஹராம் தீவிரவாதிகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதல்களில் 14 ஆண்கள், 14 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 38 பேர் பலியானதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஹஷ்ஷோமி மஷ்ஷாவுடொவ் வானொலியில் நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கு இரையானதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருமாதத்தில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE