சச்சினை ஆட்டமிழக்க செய்ததால் இந்தியர்கள் என்னை மன்னிக்கமாட்டார்கள்: அவுஸ்திரேலிய வீரர் உருக்கம்…

690
உலகக்கிண்ண போட்டியில் சச்சினை ஆட்டமிழக்க செய்ததற்காக இந்தியர்கள் இன்னும் தன்னை மன்னிக்கவில்லை என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்.

உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கிளெனும், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் மோதிக்கொள்ளும் ஆட்டம் என்றால் மைதானத்தில் அனல் பறக்கும்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக சச்சின் அதிக ஓட்டங்கள் குவித்திருந்தாலும் மெக்ராத்திற்கு எதிராக கொஞ்சம் திணறவே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கிளென் மெக்ராத் கூறுகையில், 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சச்சின் என்னுடைய பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே நான் பவுன்சர் வீசி அவரை ஆட்டமிழக்க செய்தேன். அதற்காக இந்தியர்கள் இன்னும் என்னை மன்னிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

SHARE