சிறுமி கற்பழித்து கொலை, வாலிபரை கல்லால் தாக்கி கொன்ற மக்கள்.

326

இந்த நிலையில் பெற்றோர்களும் கிராமத்தினரும் சிறுமியை தேடினர் அப்போது சிறுமியை கடைசியாக கிராமத்தில் பெட்டிகடை நடத்தி வந்த கனிகந்தி சுரேஷ் ( வயது 30) என்ற வாலிபர் அழைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக கிராமத்தினர் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது கிராமமக்கள் மடப்பள்ளியில் உள்ள சுரேஷ் வீட்டில் தேடி பார்த்த போது. சுரேஷ் வீட்டில் இருந்த இருப்பு டிரங் பெட்டியில் சிறுமியின் பிணம் நிர்வாணமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுரேஷ் தலைமறைவாகி விட்டார்.

சுரேஷ் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு சுரேசை தேடி வந்தனர். இதற்காக 6 தனிப்படையும் அமைக்கப் பட்டது.

இந்த நிலையில் தலை மறைவான சுரேஷ் ஏலுர் பஸ் நிலையத்தில் நிற்பதை கிராம மக்கள் பார்த்து விட்டனர். உடனடியாக அவனை பிடிக்க முயன்றனர்.
உடனே அவன் தப்பி ஓடினான். பொது மக்கள் விடாமல் விரட்டினர். தகவல் அறிந்ததும் போலீசாரும் அங்கு வந்து சுரேசை பிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டனர்.
ஏலுர் ரெயில்வே மேம்பாலத்தில் ஓடிய சுரேஷ் பொது மக்கள் போலீசாரு பிடியில் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தான்.
குற்றுயிறாக கிடந்த அவனை மீட்க போலீசார் முயன்றனர்.

ஆனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்களால் சுரேசை தாக்கினர். போலீசார் அவனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஆவேசம் அடைந்த மக்கள் போலீசார் முன்னிலை யிலேயே சுரேசை அடித்து உதைத்தனர். இதில் சுரேஷ் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடித்து கொல்லபட்ட சுரேஷின் மீது 2 வழக்குகள்dath

SHARE