ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது

351

 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
images (1)

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் 14ம் திகதி தொடக்கம், ஒக்ரோபர் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னதாக, ஜனாதிபதியின் கையில், ஓகஸ்ட் 21ஆம் நாள் அந்த அறிக்கையின் பிரதி ஒன்று கிடைக்கும்.

அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அறிக்கையின் பிரதி கையில் கிடைக்கும் வரையில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படாது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE