ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக ரஹானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டு செல்கிறது.

381
ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்காக ரஹானே தலைமையிலான இந்திய அணி இன்று ஜிம்பாப்வே புறப்பட்டு செல்கிறது.இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டி20 ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது.இதில் அணித்தலைவர் டோனி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, தவான், அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு ரஹானே புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

தவிர, அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், ராபின் உத்தப்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:–

ரஹானே (அணித்தலைவர்), முரளி விஜய், அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, கேதர் யாதவ், உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஹர்பஜன் சிங், அக்ஷர் பட்டேல், குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ் வர்குமார், மொகித் சர்மா, சந்தீப் சர்மா.

rahane

SHARE