கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு துணிச்சலாக செய்தி தெரிவித்த செய்தியாளர் வீடியோ இணைப்பு)

336

 

மியான்மர் நாட்டில் கடும் வெள்ளம் காரணமாக வீதியில் தேங்கி இருந்த கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு பத்திரிகையாளர் ஒருவர் செய்தி தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மர் நாட்டில் கடந்த யூலை 16ஆம் திகதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக இதுவரை 27 பலியாகியுள்ளதாகவும் ஒரு லட்சத்துக்கு அதிகமாக மக்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தை பற்றி செய்தி தர சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் நிற்பதற்கு இடம் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் சாலையில் தனது கழுத்தளவு தேங்கி இருந்த தண்ணீரில் நின்றவாறே துணிச்சலாக செய்தியை தெரிவித்தார்.

அப்போது அவருக்கு பின்னால் ஒரு படகில் சிலர் சென்று கொண்டிருந்ததும் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் வெள்ளத்தினால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

Share/Bookmark

SHARE