பிரித்தானியாவின் பல இடங்களில் த,தே.கூட்டமைப்பினரை ஆதரித்து துண்டுப் பிரசுரங்கள்

348

 

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழ தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பிற்கே அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமென தமது ஆதரவினை துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் அதனை ஆலயங்கள் வியாபார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் போன்றவற்றில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தியும் தமது மனப்பூர்வமான ஆதரவினை த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பாக ஆதரவாளர் ஒருவரை கேட்டறிந்தபோது அவர் கூறிய கருத்து ” த.தே.கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகள் முரண்பாடுகள் செயற்பாடுகளில் மந்தநிலை போன்ற பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதும் உலக நாடுகளால் நன்கு அறியப்பட்டதுமான கட்சி இதுவே எனவே எமது பிரச்சினைகளை எமக்குள்ளேயே தீர்ப்பதினை விட்டு விட்டு பிரிந்து சென்று சிலரும் சிங்களவரின் கைக்கூலியாக சிலரும் செயற்படுவதென்பது நாமே எமது தலையில் மண்கொட்டுவதற்கு சமனாகும்.

எனவேதான் நாம் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரண்டு எமது ஆதரவினை த.தே.கூட்டமைப்பிற்கு வழங்குமாறு தாயக மக்களை இத்தகைய செயற்பாடுகளினூடாககேட்டுக்கொள்கிறோம். எனத் தெரிவித்தார்.
1

2

3

4

SHARE