இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு?

347
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அவர்களின் அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களின் சம்பளம் வேறுபடும்.பிரிவு ‘ஏ’:-இதில் டோனி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. 1 டெஸ்ட் போட்டிக்கு ரூ. 5 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு 3 லட்சமும் கொடுக்கப்படுகிறது.

பிரிவு ‘பி’:-

ஓஜா, புஜாரா, முரளிவிஜய், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், ரஹானே, ராயுடு, முகமது சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படி ஊதியம் ரூ. 50 லட்சம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு 3 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு 1.75 லட்சம் வழங்கப்படுகிறது.

பிரிவு ‘சி’:-

மிஸ்ரா, ஆரோன், சகா, பின்னி, புன்காஜ் சிங், வினய் குமார், மொகித் சர்மா, குல்கரனி, ரசூல், அக்சர் படேல், திவாரி, உத்தப்பா, கரண் சர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ராகுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.25 லட்சம், ஒரு டெஸ்ட் போட்டிக்கு 1.5 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு 1 லட்சமும் கொடுக்கப்படுகிறது.

ஐபிஎல் ஒப்பந்தங்களுக்கும் இதற்கும் எந்தவித சமந்தமும் இல்லை. தவிர, போனஸாக கூடுதல் சம்பளம் கிடைக்கும்.

அதாவது டெஸ்ட் தரவரிசையில் 3 இடங்களுக்குள் உள்ள அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 50 சதவீத கூடுதல் ஊதியம் கிடைக்கும்.

டி20 உலகக்கிண்ணம் அல்லது 50 ஓவர் உலகக்கிண்ணம் வென்றால் 300 சதவீதம் அதிகமாக ஊதியம் கிடைக்கும்.

டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால் ரூ 5 லட்சம், இரட்டை சதம் அடித்தால் ரூ.7 லட்சம் துடுப்பாட்ட வீரர்களுக்கு கிடைக்கும்.

அதேபோல் பந்து வீச்சாளர்களுக்கு ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தினால் ரூ. 5 லட்சமும், 10 விக்கெட் வீழ்த்தினால் ரூ. 7 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை பிரபல விளையாட்டு இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

SHARE