பெற்றோர்களின் கண்முன்னே கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி

302

 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னஜ் மாவட்டத்தில்தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் ஒரு சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், “காலை 11 மணியளவில் எங்கள் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த 6 பேர், பணம் மற்றும் நகையைக் கேட்டு மிரட்டி எங்களைக் கட்டி வைத்தனர். என் மாமியாரையும் என் சின்ன குழந்தையையும் அவர்கள் அடித்து உதைத்தனர்.
b8d50b5c-3eab-40ea-820d-1a3b7c350bcd_S_secvpf
எங்கள் கண்முன்பாகவே எங்கள் மகளை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். அவளை விட்டு விடும்படி கதறிய எங்களின் அழு குரலோ, என் மகளின் அலறலோ அவர்களை பாதிக்கவில்லை.” என்றபடி உடைந்து அழும் இந்த தாய் செய்த தவறு என்ன? பட்டப்பகலில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்குதான் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு இருக்கிறதா? என்று பல சமூக ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இந்த கொடூரத்தை நிகழ்த்திய அந்த 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
கொடூரமான அந்த மிருகங்களால் படுகாயமடைந்த அந்தப் பெண் தற்போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று “கேங் ரேப் என்று கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒருவர் பலாத்காரம் செய்தாலும் கூட நான்கு பேரின் பெயர்களை புகாரில் சேர்க்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள். அது எப்படி நடக்க முடியும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.” என்று நேற்று பிரமாதமான கருத்துக்களை உதிர்த்த முலாயம் சிங் அவர்களே இந்த கொடூர சம்பவம் குறித்து நீங்கள் என்ன கூறுவீர்கள்?

 

SHARE