உலகை மிரட்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் எய்ட்ஸ் நோய்

270
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை எய்ட்ஸ் எனும் கொடிய நோய் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கியவர்கள் மிகக்கொடூரமான முறையில் கொன்று குவித்து வருகின்றனர்.மேலும், பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்திவருகின்றனர், இந்நிலையில் மொரோக்கானை சேர்ந்த இரண்டு பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது.

அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் பரவி வருகிறது என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான செய்திகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரையில் 16க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அனைத்து தீவிரவாதிகளும், எய்ட்ஸ் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.எஸ். தலைமை உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதம், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்த முன்வந்து உள்ளது

SHARE