இறந்ததாக எண்ணி உயிருடன் புதைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்: மீட்கப்பட்டும் பயனில்லாமல் போன பரிதாபம் (வீடியோ இணைப்பு)

324
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்ததாக எண்ணி உயிருடன் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ஹொண்டுரஸ்(Honduras) மாகாணத்தில் உள்ள லா எண்ட்ராடா பகுதியை சேர்ந்தவர் நெய்சி பெரேஸ்(Neysi Perez 16).கர்ப்பிணியான இவர் சம்பவத்தன்று வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அவர் மயக்கமடைந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நெய்சி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து திருமண ஆடையுடுத்தி அவரை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் அடுத்த நாள் சமாதியில் நெய்சியின் குரல் கேட்டதையடுத்து தனது மனைவி இறக்கவில்லை என்றும் சமாதியை திறக்கவேண்டும் என்றும் அவரது கணவர் கூறினார்.

இதையடுத்து சமாதியை உடைத்து பார்த்தபோது நெய்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காமல் நெய்சி இறந்துபோனார்.

இதையடுத்து அவரது உடல் முதலில் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE