சங்கக்காராவின் இழப்பு.. சோகத்தில் இலங்கை அணி: சொல்கிறார் மேத்யூஸ்

349
சங்கக்காராவின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தற்போது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி சங்கக்காரா ஓய்வு பெற்ற பிறகு அவர் இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

இந்த சூழல் இலங்கை அணி வீரர்களுக்கு கடினமாக இருப்பதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவற்கு முன்னதாக பேசிய மேத்யூஸ், “சங்கக்காராவின் ஓய்வையடுத்து எங்கள் அணி இன்னும் ஒரு போட்டியை கூட விளையாடாததால் சற்று கடினமாகத்தான் இருக்கும்.

அவரின் இழப்பு இலங்கை அணிக்கு சற்று கடினமான ஒன்றாகும். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். இருப்பினும் அதை ஈடுகட்டும் முயற்சியை தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE