இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடக்கத்திலே இந்திய அணி திணறல்

343
இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது.3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனஇந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் களமிறங்கியது.

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் ராகுல் (2) முதல் ஓவரிலே பிரசாத் பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வந்த ரஹானே (8) பிரதீப் பந்தில் அவுட் ஆனார். இதனால் 14 ஓட்டங்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டை இழந்தது.

தற்போது 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 24 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அணித்தலைவர் கோஹ்லி (4), புஜாரா (9) விளையாடி வருகின்றனர்.

SHARE