ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லொறியொன்றிலிருந்து, அகதிகள் பலரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி லொறியின் குளிரூட்டப்பட்ட பகுதிக்குள் சுமார் 50 சடலங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லொறியில் ஹங்கேரி இலக்கத் தகடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை பயன்படுத்தி தப்பியோடிய லொறி ஓட்டுநரை கண்டுப்பிடிப்பதற்காக ஆஸ்த்ரிய அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றவுள்ளதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.
இவ்வாறு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்துள்ளார்.
இது ஐரோப்பா முழுவதற்குமான எச்சரிக்கையென்றும் அகதிகள் பிரச்சனையில் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலமே அதனை சமாளிக்க முடியும் என்றும் ஏஞ்சலா மார்க்கெல் குறிப்பிட்டுள்ளார்.