ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.

344

 

ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உளவுபார்த்ததாகவும் அதன் காரணமாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நான்கு பேர், தலை கீழாக தொங்கவிடப்பட்ட நிலையில், எரியூட்டப்படும் காட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணொளியானது, ஈராக்கின் பக்தாத் நகரில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ருட்பா என்ற நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

ருட்பா நகரானது தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE