அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சியாட்பெல் நகரின் பிரதான சாலையில் பெண்மணி ஒருவர், குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு கார் ஓட்டி வருவதாக ரோந்து பணியில் இருக்கும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை பொலிசார் மடக்கிப்பிடித்தனர், தனது குழந்தை மிகவும் பசி மிகுதியால் அழுததால் இவ்வாறு செய்தேன் என்று கூறி மன்னிப்புகோரியுள்ளார்.
ஆனால், அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத பொலிசார், அந்நாட்டு சட்டப்படி கார் ஓட்டும்போது இவ்வாறு செய்வது தவறாகும் எனவே, 125 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.