தலையை பதம் பார்த்த பவுன்சர்.. தொடர்ச்சியாக விளாசிய பவுண்டரி: ரஹானேவின் ருசிகர தகவல்

328
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் தனக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் முன்னணி வீரரான ரஹானே தெரிவித்துள்ளார்.இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரஹானே முக்கியமான தருணத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

இந்நிலையில் இணையத்தளம் ஒன்றிற்கு ரஹானே அளித்தப் பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கிரிக்கெட் வாழ்க்கைக்குள் நுழையாமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

இது தொடர்பாக பதிலளித்த ரஹானே, “நான் கிரிக்கெட் வீரராக இல்லாவிட்டால், இந்திய விமானப்படையில் அதிகாரியாக இருந்திருப்பேன்” என்றார்.

தனது இளமை கால கிரிக்கெட் தொடர்பாக பேசிய ரஹானே, “ஒருசமயம் ஜூனியர் போட்டிகளில் விளையாடிய போது பவுன்சர் பந்து என் தலையை தாக்கியது.

ஆனால் அதற்கு அடுத்த 5 பந்துகளை பவுண்டரிக்கு விளாசினேன். இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட் வீரர்களில் சச்சின், டிராவிட்டை பிடிக்கும் என்று தெரிவித்த ரஹானே, டென்னிஸ் வீரர்களில் ரோஜர் பெடரரை பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE