சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள்: முன்னாள் அணித்தலைவர் அதிர்ச்சி தகவல்

309
பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் பயிற்சியாளர் பணியில் இருந்து தான் விலகியதாக முன்னாள் பாகிஸ்தான் தலைவர் ஜாவித் மியான்டட் தெரிவித்துள்ளார். 1976 முதல் 1993ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் இருந்த மியான்டட் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்.

இந்நிலையில் ஓய்வுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்த மியான்டட், அந்த பணியில் இருந்து திடீரென்று விலகியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் பயிற்சியாளராக இருந்த போது சில வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் காலித் மெகமூத்திடம் வலியுறுத்தினேன்.

1999ல் சூதாட்ட அச்சுறுத்தல் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பலவீனமாக்கியது. தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க மனசாட்சி இடம் கொடுக்காததால் 1999ம் ஆண்டு அந்த பதவியில் இருந்து விலகினேன்” என்று கூறியுள்ளார்.

SHARE