மந்திரவாதியாக ஆசைப்பட்ட தந்தை: பெற்ற குழந்தையை கொன்று ரத்தம் குடித்த கொடூரம்

297
உத்திர பிரதேசத்தில் மந்திரவாதியாக ஆசைப்பட்ட தந்தை தனது குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தின கான்பூரின் டேகட் மாவட்டத்தை சேர்ந்த கிரிஜேஷ் பால் என்பவர் தன்னுடைய சொந்த கிராமமான ஜாமுராவில் பெரிய மந்திரவாதி ஆக வேண்டும் என்று பல்வேறு பூஜைகளை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கிரிஜேஷ் தன்னுடைய 9 வயதான பெண் குழந்தை குஷியை அடித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் அக்குழந்தையின் உடலிலிருந்து வெளிவந்த ரத்தத்தினை குடிக்க ஆரம்பித்துள்ளார். இச்சம்பவத்தின் போது அவரது மனைவியும், இரண்டு மகன்களும் கோவிலுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டுக்கு திரும்பிய அவரது மனைவி, கணவனின் இந்தக் கொடூரச் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரது அலறலை கேட்ட பொதுமக்கள் கிரிஜேஷை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE