தோனி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்

341

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என, தோனி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 34. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்தில் விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார்.

இவரது கைகளில் ‘ஷூ’ உட்பட பல விளம்பர பொருட்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநல ஆர்வலர் ஜெயக்குமார், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோனிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தோனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ், என்.வி.ரமணா முன் அடங்கிய ‘பென்ச்’ முன், வரும் செப்., 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

SHARE