மும்பையில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய சாம்பியனான சவுரவ் கோசல் சாம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளார்.
23 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட சிசிஐ ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 2ம் தரநிலை வீரரான சவுரவ் கோசல் (வயது 29), எகிப்தின் மேசென் ஹெஷாமை எதிர்கொண்டார். 89 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 11-7, 13-11, 9-11, 9-11, 11-8 என்ற கணக்கில் கோஷல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் போர்ஜா கோலன், தென் ஆப்பிரிக்காவின் ஷான் லி லாக்சை எதிர்த்து விளையாடினார். இதில், கோலன் 11-7, 10-8 என முன்னிலை பெற்றிருந்த சமயத்தில், எதிர்த்து விளையாடிய ஷான காயம் காரணமக போட்டியில் இருந்து விலகினார். இதனால், கோலன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் முதல் தரநிலையில் உள்ள ஸ்பெயின் வீரர் போர்ஜா கோலனுடன் கோசல் மோத உள்ளார்.