ஜப்பானில் பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 16 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 30 லட்சம் பேர் வெளியேறி பாதுகாப்பான இடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 27 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 183,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.