சானியா மிர்சாவின் நல்லுள்ளம்: தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்கள் தத்தெடுப்பு!

358

தெலுங்கானாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார்.

தெலுங்கானா முதலமைச்சரின் மகளும், எம்.பியுமான கவிதா தெலுங்கானா ஜாக்ருதி அமைப்பின் தலைவராக உள்ளார்.

அங்குள்ள ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதால் அவர்களது குடும்பத்தை காக்க வசதியுள்ளவர்கள் அவர்கள் குடும்பத்தை தத்தெடுத்துக்கும் திட்டத்தை கவிதா தொடங்கியுள்ளார்.

இத்திட்டத்தின்படி தெலுங்கானாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார்.

அந்த மாநிலத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா, கிரிக்கெட் வீரர் ஓஜா ஆகியோரும் தத்தெடுத்துள்ளனர். இதுவரை 80 விவசாய குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலத்தின் விளம்பர தூதராக உள்ள சானியா மிர்சா ரூ. 3 லட்சமும், ஜூவாலா கட்டா ரூ. 10 லட்சமும், ஓஜா ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE