அஸ்வினுடன் விளையாடுவதில் பிரச்சனை இல்லை: அமித் மிஸ்ரா

373

இந்தியாவுடன் 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி விரைவில் இந்தியா வரவுள்ளது.

இந்தத் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், அமித் மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அஸ்வினும், நானும் இணைந்து விளையாடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இருவருமே விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஒருவர் எதிர் அணிக்கு நெருக்கடி கொடுத்தால், மற்றொருவர் விக்கெட்டுகளை வீழ்த்தினாலே போதுமானது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் சவாலாக இருக்கும். ஆனால், ஒருநாள் போட்டியில் இந்தியா சிறந்த அணியைக் கொண்டிருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விளையாடும் விதம் குறித்து என்னால் கூற இயலாது. ஆனால், சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். டோனியும், விராட் கோஹ்லியும் வீரர்களின் மனஉறுதியை வலுப்பெறச் செய்துள்ளனர்.

களமிறங்கும் அணியில் இடம்பெறுவேனா, மாட்டேனா என்பதை பற்றியெல்லாம் நினைக்கவில்லை.

எனது பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தை வலுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

SHARE