மோடிக்காக பாடிய சச்சின்

300

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரபலப்படுத்தும் பாடலின் சில வரிகளை சச்சின் பாடியுள்ளார்.

இந்தியாவை துாய்மையானதாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன், கடந்த ஆண்டு அக்., 2ல் ‘கிளீன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார். இதில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றனர். இத்திட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ‘துாய்மை இந்தியா’ கீதத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கான பாடலை பிரசூன் ஜோஷி இயற்றியுள்ளார்.  சங்கர்–இஹ்சான்–லாய் இசை அமைத்துள்ளனர். சங்கர் மகாதேவனுடன் சேர்ந்து சில வரிகளை சச்சினும் பாடியுள்ளார். ‘ரிக்கார்டிங்கின்’ போது சில ஆலோசனைகளையும் வழங்கினாராம். இப்பாடல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளான வரும் அக்., 2ல் வெளியாக உள்ளது.

SHARE