தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு

306
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு என்று இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதன் முதல் டி20 போட்டி இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான தரம்சாலாவில் வரும் 2ம் திகதி நடக்கிறது.

இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினோம். இதன் மூலம் இந்திய அணியின் உத்வேகமும், உற்சாகமும் அதிகரித்துள்ளது.

சவாலான தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க அனைத்து வகையிலும் தயாராகி வருகிறோம். தரம்சாலாவில் உள்ள சீதோஷ்ண நிலை எங்களுக்கு பழக்கமான ஒன்று தான். அதனால் எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை.

மேலும், தரம்சாலாவில் நாணய சுழற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கும். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய தொடருக்கு முன்பாக ஒரு வார கால நீண்ட பயிற்சி முகாம் நடத்தப்பட்டு இருக்கிறது.

இது இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கப் போகிறது” என்று கூறியுள்ளார்

SHARE