இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா நேற்று தொடங்கி வைத்தார்.

312

இலங்கையில் 4வது முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் கிளிநொச்சியில் இன்று தொடங்கியது.

5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா நேற்று தொடங்கி வைத்தார்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த தொடர் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடரில் 16 ஆடவர் அணிகளும், 8 மகளிர் அணிகளும் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டிகள் யாழ்ப்பாணம், ஒட்டுச்சுட்டான், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேச மைதானங்களில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில், “முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் இன்று தொடங்குகிறது.

சங்கக்காரா இந்த தொடரை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த 5 நாட்கள் கொண்ட தொடர் நல்ல முறையில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

11ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் அனைத்து அணிகளையும் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE