இந்திய அதிரடி வீரர் ரோஹித் சர்மாவின் காதல் கதை தெரியுமா?

325

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரான ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றையே தனது இரட்டை சத சாதனையால் திருப்பி போட்டவர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து உலகப் பார்வையை தன் பக்கம் திருப்பிய ரோஹித், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து வரலாற்றி நீங்க இடம் பிடித்தார்.

சச்சின் தொடங்கி வைத்த இரட்டை சதத்தை அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் முறியடிக்க, யாரும் எதிர்பாராத விதமாக ரோஹித் அதையும் ஊதித் தள்ளினார். இதற்கு பின்னால் அவரது கடின உழைப்பு காரணமாக அமைந்தது.

இதற்கு முன்னதாக இவர் நடிகையும் மொடல் அழகியுமான சோபியா ஹயாத்துடன் காதல் வயப்பட்டிருந்தார். இவரும் ஒன்றாக சில காலம் சுற்றித் திரிந்தனர். இவர்கள் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.

இதனால் அவரது துடுப்பாட்ட திறனும் படிபடியாக குறைந்து போட்டிகளில் சொதப்ப ஆரம்பித்தார். இதனால் விமர்சனங்கள் எழுந்தது.

இந்திய அணியில் இருந்து கூட நீக்கப்பட்டு விடும் நிலையில், அவர் காதலி சோபியா ஹயாத்தை விட்டு விலகி கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தினார்.

தீவிர பயிற்சிக்கு பின்னரே இரட்டை சதம் அடித்து உலகசாதனை படைத்தார். தற்போது தொடர்ந்து ஜொலித்து வருகிறார்.

அதே போல் இதற்கு முன் அவர் 2 பேரை காதலித்துள்ளார். சுவாமி விவேகாந்தா இண்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் போதே ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் பள்ளியோடு அந்த காதல் பறந்து போனது.

அதன் பின்னர் ஐதராபாத் பெண் ஒருவரை காதலித்தார். அவரை ரோஹித் ‘சிக்கி’ என்று செல்லமாக அழைப்பாராம். இந்த காதலும் தீவிரமாகவே இருந்தது. ஆனால் ரோஹித் வீட்டிற்கு இந்த விவகாரம் தெரிந்த பிறகு இதுவும் நிலைக்கவில்லை.

இந்த நிலையில் தான் இவருக்கு சமீபத்தில் ரித்திகா என்பவருடன் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர் ரோஹித்தின் கிரிக்கெட் விவகாரங்கள் மற்றும் விளம்பரங்களை கவனிக்கும் மேலாளராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியவர்.

ரித்திகாவுடன் ஆரம்பத்தில் நட்புடன் பழகிய ரோஹித் சர்மாவுக்கு அதுவே நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த மே மாதம் தனது பிறந்த நாள் தினத்தன்று இருவருக்கும் இடையே உள்ள உறவை டுவிட்டரில் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

மேலும், மும்பை பொரிவலி ஸ்போர்ட்ஸ் கிளப்பில், இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.

SHARE