தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா: ஷேவாக் இரட்டை சதம் விளாசிய மைதானத்தில் 2வது மோதல்

318

இந்தியா- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நாளை நடக்கவிருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அனைத்துப் போட்டிகளிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது.

கடைசியாக நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ஷேவாக் 219 ஓட்டங்களை விளாசினார். இந்தப் போட்டியில் இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

மேலும், கடந்த 2006ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2008ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மற்றொரு போட்டியில் 54 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது.

தற்போது அந்த மைதானத்தில் 4 வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

SHARE