எனது அடுத்த இலக்கு..? ஈடன் கார்டனில் கங்குலியிடம் தெரிவித்த டோனி

294

தற்போதைய இந்திய அணித்தலைவர் டோனி தடுமாறி வரும் நிலையில், முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி அவரை பாராட்டி பேசியுள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதாலும், அவர் துடுப்பாட்டத்தில் தடுமாறி வருவதாலும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “சில தினங்களுக்கு முன் நான் ஈடன் கார்டன் மைதானத்தில் டோனியை சந்தித்தேன். அப்போது அவர் 2வது டி20 உலகக்கிண்ணத்திற்கு இலக்கு வைத்திருப்பதாக என்னிடம் கூறினார்.

ஒவ்வொருவரும் அவரை பற்றி விமர்சனம் செய்து எழுதும் போதும், அவர் அமைதியாக நீங்கள் பெருமைப்படும் விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். அவர் ஒரு போராடும் ஜாம்பவானாக இருக்கிறார்.

பல சந்தர்ப்பங்களில் உங்களின் மகிழ்ச்சிக்காக, நீங்கள் பெருமைப்படும் தருணத்திற்காக அவர் போராட வேண்டும் என்றால் குறைந்தது உங்கள் அணித்தலைவருக்கு ஆதரவு கொடுங்கள்.

டோனியை நம்புங்கள். கிரிக்கெட் வரலாற்றில் பல சிக்கலான தருணங்களில் போராடியவர். அதே போல் அவர் தொடர்ந்து போராடுவார்” என்று கூறியுள்ளார்.

இதனை கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE