மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றுமா இலங்கை?

288

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை தடுமாறுகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில் கொழும்பு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் டொஸ் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இதனை தொடர்ந்து, இலங்கை அணியின் திமத் கருணரத்னே, கவுஷல் சில்வா இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

சில்வா தான் சந்தித்த முதல் பந்திலேயே டெய்லரின் பந்துவீச்சில், டக்கவுட் ஆகி வெளியேறினார், அடுத்து களமிறங்கிய மெண்டிஸ் மற்றும் கருணரத்னே அடுத்தடுத்து தலா 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

தற்போதைய நிலையில் 21 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.

SHARE